இந்திய அரசானது மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களுடன் சில சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதனை மக்கள் பெற வேண்டுமானால், இந்திய குடிமகன் என்பதற்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் முக்கிய தேவையாக உள்ளது. இதில், ஆதார் எண்ணாது இந்திய உள்ள ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான எண்ணை குறிப்பதாகும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால், இந்த ஆதார் எண்ணை ரேஷன் கார்டு, பான் கார்டு, பாஸ் புக், எலக்ட்ரிக் பில் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்க கோரி அரசு அறிவுறுத்தி வருகிறது. இதில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி பல மாதங்களாக கால அவகாசம் அளித்த போதும், சிலர் இன்னும் இணைக்காமலே உள்ளனர். இதனால், மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணை இணைக்க இருப்போர் ரூ. 1000 செலுத்தி ஜூன் 30ம் தேதிக்குள் பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு., மாதாந்திர ஊதியம் ரூ.1,16,600!!!
இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், வரி ஏய்ப்பு மற்றும் மோசடி பணப் பரிவர்த்தனையை தவிர்ப்பதற்காகவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜூன் 30ம் தேதிக்கு ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் முடக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.