ஆதார் வைத்திருப்போருக்கு கடைசி எச்சரிக்கை ஒன்றை, அரசு அதிரடியாக வெளியிட்டுள்ளது. இதை முடிக்காத பயனர்களுக்கு இந்த சேவை நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கடைசி எச்சரிக்கை:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனித்துவமிக்க 12 இலக்க ஆதார் எண்ணை ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு வழங்கியுள்ளது. இந்த ஆதார் எண்ணை கடந்து 2012 ஆம் ஆண்டு, அரசின் முக்கிய ஆவணமான பான் அட்டையுடன் இணைப்பது அவசியம் என அரசு அறிவித்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கான காலக்கெடு வருமான வரி ஆணையத்தால் பலமுறை நீட்டிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த இணைப்பை செய்து முடிக்காதவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி, இதனை முடிக்குமாறு அரசு அறிவுறுத்தி இருந்தது. அபராதத்துடன் அதை செய்து முடிக்க, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலும் இதனை முடிக்காதவர்கள் பான் கார்டு செல்லாத தாக்கப்படும் என்றும், அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளும் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் இதை முடிக்காத பயனர்கள் விரைந்து முடிக்குமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.