தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கி வரும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் அந்தந்த அரசு பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று முறையிட சில நெறிமுறைகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வகுத்துள்ளார்.
அதாவது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள தபால்காரரின் ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட மாணவ மாணவியர்களின் ஆதார், மொபைல் எண் மற்றும் கைவிரல் ரேகையை பயன்படுத்தி ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கை தொடரலாம். இந்த நடைமுறைகள் ஒரு சில நிமிடங்களிலே நடந்து விடுவதால், மாணவர்கள் வாய்ப்பை தவற விடாமல் உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்