‘தவறாக சித்தரிக்கப்பட்ட என்னுடைய கருத்துக்காக மிகவும் வருந்துகிறேன்’ – முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட ஆ.ராசா!!

0

சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் திமுக எம்பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். தற்போது இதற்கு தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஆ.ராசா.

ஆ.ராசா:

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பல சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் தேர்தல் களமே மிக பதட்டமாக இருந்து வருகிறது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பி ஆன ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பற்றி சற்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதற்கு கொந்தளித்த அதிமுகவினர் தேர்தல் விதிமுறையை ராசா மீறியுள்ளார். எனவே அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது வந்தனர். மேலும் இதுகுறித்து பேசிய ராசா ஊடகங்கள் நான் பேசியதை திரித்து விடுகின்றனர் என்று கூறினார்.

கொரோனா பரவல் மத்தியில் ஹோலி கொண்டாட்டம் – சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடிய மக்கள்!!

தற்போது ராசாவின் பேச்சினால் தமிழக முதல்வர் எடப்பாடி மனம் வருந்தியுள்ளார். இந்நிலையில் பேட்டியளித்த ஆ.ராசா கூறியதாவது, இடப்பொருத்தமற்று தவறாக சித்தரிக்கப்பட்ட எனது கருத்துக்காக நான் மிகவும் மனம் வருந்துகிறேன். நான் அவர் தாயார் பற்றி பேசியதாக முதல்வர் கண்கலங்கி உள்ளார். இதனால் நான் மிகவும் வேதனை அடைகிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு முதல்வர் உண்மையிலேயே மன வேதனை அடைந்தால் நான் அவரிடம் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here