எடப்பாடியை விமர்சித்து பேசியதால் ஆ.ராசாவின் உருவபொம்மை எரிப்பு – அதிமுகவினர் கொந்தளிப்பு!!

0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி திமுக எம்பி ஆ.ராசா ஓர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். தற்போது இதனை எதிர்த்து அதிமுகவினர் ராசாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆ.ராசா:

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக பிரச்சார கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பிற கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் தேர்தல் நேரங்களில் சில அரசியல் பிரமுகர்கள் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளியீட்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் திமுக எம்பி ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசியது. இது கடுமையாக கண்டிக்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவரது பேச்சுக்கு அதிமுகவினர் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ராசாவை பற்றிய தகவல் அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளதாம். இதனை தொடர்ந்து தமிழக முதல்வரிடம் ஆ.ராசா மனமார்ந்த மன்னிப்பையும் கேட்டுள்ளார். இருந்தும் கூட அதிமுகவினர் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

‘நீட் குறித்த முறைகேடுகளை சிபிஐ கண்காணிக்கும் என நம்பிக்கை உள்ளது’ – நீதிமன்றம் அதிரடி!!

அந்த வகையில் அரியலூரில் அதிமுகவினர் ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடும் கோபத்துக்கு உள்ளாகிய அதிமுகவினர் அரியலூரில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் தேர்தல் முடிந்து முடிவுகள் வருவதற்குள் என்னென்ன நடக்கவுள்ளது என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here