தமிழக அரசானது போக்குவரத்து துறையை மேம்படுத்த அரசு பேருந்துகளில் நவீன வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் போக்குவரத்து துறையை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசானது போக்குவரத்து துறையில் புதிய திட்டத்தினை நாளை தொடங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது .
தமிழக தொழில் நிறுவனங்களில் தமிழருக்கே முன்னுரிமை., இந்த மாவட்டத்தில் 80% பேருக்கு Job கன்பார்ம்!!
இதுகுறித்து சென்னையில் ஜி.பி.எஸ் . மூலம் பேருந்துகள் நிறுத்தப்படுதல் மற்றும் ஒலி அறிவிப்பு திட்டம் நாளை தொடங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார் .மேலும் சென்னை மாநகர பேருந்தில் தமிழ், ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் ஜி.பி.எஸ் சாதனங்கள் மூலம் 300 மீட்டருக்கு முன்னதாக பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் பேருந்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிறப்பான சேவைகளை தமிழக அரசானது மக்களுக்கு அளித்து வருகின்றது.