கரடியுடன் ஒரு பெண் செல்ஃபி எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கரடிக்கும், பெண்ணுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மெக்ஸிகோவில் உள்ள சிபின்க் சுற்றுச்சூழல் பூங்காவில் நடந்தது.
கரடி விஜயம்:
ஒரு கருப்பு கரடி, மெக்ஸிகோ பூங்காவில் நடைபயணம் மேற்கொண்ட ஒரு குழுவை அணு கியது. ஆனால் அவர்கள் தப்பி ஓடவில்லை. குழுவில் இருந்த பெண்களில் ஒருவர், கரடி நெருங்கும் போது அதனுடன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கரடியின் சேட்டை:
வீடியோவில், பின்னால் இருந்து கரடி அவர்கள் அருகே பதுங்கும்போது நடைபயணிகள் அருகே இருப்பதைக் காணலாம். மேலும், கரடி பெண்களில் ஒருவரிடம் நெருங்கி வரும்போது,
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் குழு கொரோனா பரிசோதனை – தமிழக அரசு முடிவு..!
அவர் விலங்குடன் செல்பி கிளிக் செய்வதை போலவும், இதே சம்பவத்தின் மற்றொரு கிளிப்பில், கரடி நிமிர்ந்து நிற்பதையும் பெண்ணின் தலைமுடியைத் தொடுவதையும் காண முடிகிறது. .
பெண்ணிற்க்குக் குவியும் பாராட்டு:
கரடி தனக்கு நெருக்கமாக இருந்தபோதிலும் அமைதியாக இருப்பதற்காக பலரும் அந்தப் பெண்ணையும் அவரது நண்பர்களையும் வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.