இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக வெடிகுண்டு வீசி பின்னர் அரிவாளால் ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. அந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு வழக்கு
நெல்லை அருகே நாங்குநேரியில் உள்ள மறுகால் குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் அருணாச்சலம் மற்றும் சுப்பையா. இரவு நேரத்தில் 12 பேர் கொண்ட கும்பல் சுப்பையாவின் வீட்டில் வெடிகுண்டை வீசியுள்ளனர். பதறியடித்து சுப்பையாவும் அவரது மனைவி சாந்தினியும் வெளியில் வந்துள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
வெளியே வந்த இருவரையும் அந்த கும்பல் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த கும்பல் அருணாச்சலம் வீட்டிற்கு சென்று வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
இதனால் அருணாச்சலமும் அவரது மனைவியும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அதில் அருணாச்சலம் ஓடிவிட அவரது மனைவி பக்கத்து வீட்டில் உள்ள குளியலறையில் ஒளிந்துள்ளார். அங்கிருந்து அவரை இழுத்து வந்த அந்த கும்பல் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளது.
போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் நாங்குநேரி உச்சினிமாகாளி கோவிலுக்கே அருகே இருவர் கொலை செய்யப்பட்டனர். அதற்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.