தமிழகத்தில் வருகிற கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு Boat House என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த வசதியை தமிழகத்தில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி சென்னை E.C.R. சாலையில் உள்ள முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை உணவகம் அமைக்கப்பட உள்ளது. இதில் சுற்றுலா பயணிகளுக்கான உணவகம், A/c , கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் 2 அடுக்கில் பிரமாண்டமாக தயாராக உள்ளது. இந்நிலையில் இதற்கான பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றம்., இன்று ஆளுநரின் ஒப்புதல்!!!
தமிழகத்தில் முதல் மிதவை உணவகம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் வலுக்க தொடங்கியுள்ளது. அதேபோல் கடலூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கூடுதலாக 4 மிதவை இறங்கு தளங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் நீர்வழி போக்குவரத்து மேற்கொள்ளலாம்.