இப்படியும் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்- காரைக்கால் சிறுவனின் பெருந்தன்மை..!!

0
karaikal boy celbrates his birthday
karaikal boy celbrates his birthday

காரைக்காலில் தனது வீட்டின் அருகில் வசிப்போருக்கு சானிட்டைசர், முகக்கவசம், ஆர்சனிக் ஆல்பம் மருந்து வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடிய சிறுவனின் செயல் அனைவராலும் பாராட்டப் பெற்றது.

யார் இந்த சிறுவன்:

காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் – சத்யா தம்பதியரின் மகன் நந்த கிஷோர். தற்போது யுகேஜி படித்து வரும் இச்சிறுவன் தனது ஐந்தாவது பிறந்த நாளை நேற்று (ஜூலை 22) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டாடினான்.

மக்களுக்கு விழிப்புணர்வு:

தனது பிறந்தநாளையொட்டி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நேற்று இரவு தான் வசிக்கும் தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்குச் சென்று 50 பேருக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்து,முகக்கவசம், சானிட்டைசர், மற்றும் இனிப்புகளை வழங்கி அப்பகுதி மக்களின் வாழ்த்துகளை பெற்றான்.

எல்லையில் இருந்து வெளியேற மறுக்கும் சீனா – லடாக்கில் மீண்டும் பதற்றம்..!!

sanitizers were distributed
sanitizers were distributed

சிறுவனின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அக்கம் பக்கத்தினர் வாழ்த்தினர்.நாமும் இதைப் பின்பற்றலாமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here