இன்றைய காலகட்டத்தில் லிவிங் டுகெதர் முறையை பலதரப்பட்ட மக்கள் எதிர்த்து வந்தாலும் உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்குப் பிறகு இன்றைய கால இளைஞர்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது. இந்நிலையில் இன்று பெங்களூரில் லிவிங் டுகெதரில் இருந்த காதலன் காதலியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த கொலைக்கான காரணம், தன் காதலன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த காதலி, காதலனை கண்டித்துள்ளார் ,அதை பொறுக்க முடியாத காதலன் அவளை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது . லிவிங் டுகெதரின் முக்கிய அம்சம் என்னவென்றால் இருவருக்கும் இடையே எழும் எந்த பிரச்சனைக்கும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இந்த காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு அனுமதி – அரசு அதிரடி!!
இந்த காலத்தில் உள்ள இளைஞர்கள் மன நிலையில் திருமணம் என்பது தங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, லிவிங் டுகெதரை தேர்ந்தெடுத்து வருகின்றனர். தற்போது நடந்துவரும் கொலை சம்பவங்கள் திருமண வாழ்க்கை எவ்வளவு கடினமோ அதைவிட லிவிங் டுகெதர் பெரும் ஆபத்தானது என்று உணர்த்தி வருகிறது.