சினிமா பாணியில் ஆட்டோவில் கடத்த மாணவியை முயற்சி – போலீசார் தீவிர விசாரணை!

0

சென்னையில் உள்ள புது வண்ணாரப்பேட்டையில் ஒன்பதாம் படிக்கும் மாணவியை கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் முயற்சி:

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணவி 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் பள்ளிக்கு ஷேர் ஆட்டோ மூலம் சென்று வருகிறார்.

kidnapped
kidnapped

அது போல் இன்று ஷேர் ஆட்டோவில் செல்வதற்கு ஏறியுள்ளார், ஆனால் அதற்கு முன் ஆட்டோவில் இரு நபர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவி புது வண்ணாரப்பேட்டையில் இறங்கும் நேரத்தில் இரு நபர்கள் கைக்குட்டை கொண்டு வாயில் வைத்து மூடி, மாணவியை கடத்த முற்பட்ட தாக கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க முற்பட்ட போது ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் வண்டியை நிறுத்தி மாணவியை தூக்கும் போது அந்த இரு நபர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்ததால் மக்கள் கூட்டம் கூடியது. மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை காயமடைந்த மாணவிக்கு முதலுதவி அளித்து அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here