90ஸ் காலகட்டத்தில், இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை மோகினி, திருமணத்திற்கு பின் ஏற்பட்ட விவாகரத்தால், மொத்த வாழ்க்கையையும் இழந்து நிலை குலைந்து போய் உள்ளார்.
நிலைகுலைந்த நடிகை:
மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர் மகாலட்சுமி என்ற மோகினி. தமிழில், 1991 ஆம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவர் மோகினி. பூனை கண்ணழகி என்ற சிறப்பு பட்டத்துடன் அழைக்கப்பட்ட இவர் புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பரத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ருத்ரகேஷ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடம் இருந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.
ஆனால், இந்த வழக்கு, நடைபெறாமல் தள்ளுபடி ஆனது. தடம் புரண்ட தனது திருமண வாழ்க்கையால், இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறி மத போதகராக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடிகையின், இந்த துயர நிலையை கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.