9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைன் கிளாஸ் – தலைமை செயலாளர் அதிரடி!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9, 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணாக்கர்களை கொரோனா தாக்கி வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுத்த தமிழக அரசு வருகிற 22ம் தேதி முதல் அதாவது வருகிற திங்கள் கிழமை முதல் தமிழக அரசுக்கு கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 9, 10 மற்றும் 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மறு உத்தரவு வரும் வரை இந்த விடுமுறை நீடிக்கும் என்றும் அரசு அறிவித்தது. தற்போது இதனை தொடர்ந்து 9, 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் நடைபெறும் என்று தலைமை செயலாளர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு கீழ் இயங்காத அதாவது, சிபிஎஸ்சி போன்ற வாரியங்களுக்கு கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு திட்டமிட்ட படி 10 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தமிழக அரசின் உத்தரவு இதனை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு அதிரடி!!

மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசுக்கு கீழ் இயங்கும் 12ம் வகுப்புகளும் வருகிற மே மாதம் 3ம் தேதியுடன் பொதுத்தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது மற்ற உயர் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து 12ம் வகுப்பு விடுமுறை கிடையாது என்று தலைமை செயலாளர் அறிவித்தார். மேலும் அவர்களுக்கு தக்க கொரோனா தடுப்பு பாதுகாப்புடன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here