9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு:

கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் உயர்கல்வி வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொதுத்தேர்வுக்காக பாடத்திட்டங்கள் குறைக்கவும் செய்தனர். ஆனால் அதற்கு சில தினங்களுக்கு பின்பு 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் குஷி அடைந்தனர்.தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘என்ன ஒரு அலட்சியம்’ – தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதித்த ஆட்சியர்!!

அதிலும் குறிப்பாக கும்பகோணம் பகுதியில் மிக வேகமாக கொரோனா பரவியது. இதன் காரணமாக பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலோசித்த தமிழக அரசு வருகிற மாணவர்களின் நலன் கருதி 22ம் தேதி முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தது. மேலும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை தொடரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here