தென்மேற்கு டெல்லியின் சாவ்லா பகுதியில் 86 வயது பெண் ஒருவர், 37 வயது நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் சோனு எனும் பிளம்பரை கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம்:
செப்டம்பர் 7ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 86 வயதான பெண் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. அவர் செல்லும் வழியில் வழியில், தனது இரு சக்கர வாகனத்தில் லிப்ட் வழங்குவதாக கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் ஒரு காமக்கொடூரன். அந்தப் பெண்ணின் அழுகையைக் கேட்டு உள்ளூர் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றவாளியைப் பிடித்து போலீசிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை – அரியலூரில் சோகம்!!
இது குறித்து துணை காவல் ஆணையர் சந்தோஷ்குமார் மீனா, IPC 376 (கற்பழிப்பு) பிரிவின் கீழ் சாவ்லா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் இரத்தப்போக்கு மற்றும் மிகுந்த அதிர்ச்சியில் இருந்துள்ளார். அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பல காயங்கள் உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உடல்நிலை சரியான காரணத்தால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.