சென்னையில் உள்ள ராஜ்பவனில் 84 பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து எண்பதாயிரத்தைக் கடந்துள்ளது.
ராஜபவனில் கொரோனா..!
சென்னையில் உள்ள ராஜபவனில் பணிபுரியும் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தகவல் வெளியானதை அடுத்து, கொரோனா பரிசாதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 147 பேருக்கு கொரோனா பரிசோதனைச் செய்யப்பட்டு, அதில் 84 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து எண்பதாயிரத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது.
மூவர் மீது சந்தேகம்..!
மேலும், ராஜ்பவனுக்கு வெளியே வேலை செய்யும் மூன்று பேருக்கும் அறிகுறிகள் இருந்ததால், பரிசோதனை செய்யப்பட்டது. அம்மூன்று பேர் விசாரிக்கப்பட்டு, சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் ராஜ்பவனுக்கு வெளியில் வேலை செய்பவர்கள் என்றும், அவர்கள் ஆளுநர் மற்றும் எந்த ஒரு பெரிய அதிகாரியுடனும் தொடர்பில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மனம் கவர்ந்தவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் செய்திகள் அனுப்பும் ஹரியாலி தீஜ் 2020..!
முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!
இதனால் அப்பகுதி மிகவும் ஆழ்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், தொற்றுப் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதுடன், தோற்று பாதித்த இடங்களில் கிருமி நாசினி தெளித்து மாநகராட்சி ஊழியர்களால் தூய்மை செய்யப் படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.