80ஸ் கனவு கன்னி நாட்டிய பேரொளி பத்மினி அவரது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம், இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் போட்டோ :
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் நாட்டிய பேரொளி பத்மினி. நடனத்தில் மிகச் சிறந்த, நடிகையாக விளங்கும் இவர் அந்தக் காலகட்டத்தில் சிவாஜியை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமை பெற்றவர். இது மட்டும் அல்லாமல் சிவாஜி எம்ஜிஆர் மற்றும் ஜெமினி கணேசன் என்ற மூன்று பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்த ஒரே நடிகை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் வெளிநாட்டில் கிளினிக் வைக்க விரும்பியதால், குடும்பத்துடன் பாரினுக்கு புலம்பெயர்ந்தார். அதன் பிறகு இவருக்கு ஒரு மகன் பிறந்தார். கொஞ்ச நாட்களுக்கு பிறகு இவர் குடும்பம் மீண்டும் சொந்த மண்ணிலேயே குடியேறியது.
பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் வரும் சமயத்தில் சொதப்பும் டைரக்டர்.., கடைசி நேரத்துல இந்த ட்ராக் தேவையா??
கடைசியாக பத்மினி, நடிகை நதியாவுடன் இணைந்து பூவே பூச்சூடவா என்ற படத்தில் பூங்காவனத்தம்மன் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார், தற்போது நாட்டிய பேரொளி பத்மினி தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.