அனைத்து தரப்பு மக்களும் தற்போது அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது, பிக் பாஸ் 5. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க பிரபல நடிகையின் தம்பியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி
முதன் முதலாக ஹிந்தியில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. தற்போது ஹிந்தியில் 14 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடர்ந்து 4 சீசன்கள் முடிவடைந்துள்ளன. நான்கு சீசன்களும் பல வித அனுபவங்களை பலருக்கும் கொடுத்துள்ளது என்று கூட சொல்லலாம்.
இப்படியாக இருக்க, இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசனுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியினை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்க போவது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. காரணம், அவர் அரசியலில் முழு வீச்சில் இறங்கியுள்ளதால் அவரால் இந்த நிகழ்ச்சியினை நடத்த முடியாது என்பது தான்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதே போல் இந்த நிகழ்ச்சியினை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியினை ஒரு இளம் வயது நடிகர் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று மக்களும் எதிர்பார்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
இதனை அடுத்து பிக் பாஸ் குழு நடிகரும் நடிகை தேவயானியின் தம்பியுமான நகுலை அணுகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நகுல் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.