75-வது சுதந்திர தின விழா கொண்டாடட்டம் – தமிழக தலைமை செயலாளர் போட்ட முக்கிய உத்தரவு!

0
75-வது சுதந்திர தின விழா கொண்டாடட்டம் - தமிழக தலைமை செயலாளர் போட்ட முக்கிய உத்தரவு!

ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா இந்த முறை கோலாகலமாக வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழா:

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவை கோலாகலமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். சுதந்திரத்துக்காக போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் நடக்க இருக்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அதாவது, தமிழகத்தில் சில கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்றுவதில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் குறிப்பாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு காரணமாக பல பிரச்சனைகள் எழுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை கருத்தில் கொண்டு சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்றும் அதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here