நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தினை குறைக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட ஒருவரின் கைகளில் இரும்பு பொருட்கள் ஓட்டுவது போன்ற ஆச்சர்யம் ஏற்பட்டுவருகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேக்னடிக் மேன்:
கொரோனா பரவல் இரண்டாம் அலையை தொடர்ந்து மீண்டும் மூன்றாம் அலை வரும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் மூன்றாம் அலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி பரவலாக போடப்பட்டுவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், சிட்கோ, சிவாஜி சவுக் பகுதியில் வசித்து வரும் 71 வயதான அரவிந்த் சோனார் கொரோனாவிற்காக தடுப்பூசி போட்டுள்ளார்.
முதல் டோஸ் ஊசியை அரசு மருத்துவமனையில் போட்ட இவர் இரண்டாவது டோஸ் ஊசியை தனியார் மருத்துவமனையில் போட்டுள்ளார். அதன்பின் ஊசி போட்ட கையில் இரும்பு பொருட்கள் எல்லாம் ஒட்டுவது போன்ற வினோத துவங்கியது. நாசிக் முனிசிபல் கார்பரேஷனிற்கு தகவல் அளிக்கப்பட்டது தொடர்ந்து இவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு இவ்வறான அறிகுறிகள் தென்பட்டதாக குறிப்பெடுக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
டாக்டர்கள் அவர் வீட்டிற்கு சென்று அவருக்கு ஏற்பட்ட இந்த காந்த கைக்கு காரணம் என்ன? அது உண்மைதானா? ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய சென்றனர். ஆய்வு முடிந்த பின் தான் கூறமுடியும் என கூறிய மருத்துவர் இவரை போல 3.5 லட்சம் பேர் தடுப்பூசி ஏதும் பாதிப்பு இல்லை என விளக்கம் கூறியுள்ளார். தற்போது இவர் மேக்னடிக் மேன் என அழைக்கப்படுகிறார்.