கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் 6-8 வாரங்கள் முழு ஊரடங்கு !!! – இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் அறிவுறுத்தல்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா கூறியதாவது : ” இந்தியாவில் 718 மாவட்டங்களில் நான்கில் மூன்று பங்கு மாவட்டங்களில் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. தற்போது இந்த மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று குறிப்புட்டுள்ளார். எனவே 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவீதமாக பரவல் குறையும் வரை கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் ஏப்ரல் மாதத்திலேயே கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு சொன்னதாகவும், ஆனால் மத்திய அரசு அதை மறுத்து முழு ஊரடங்கு பிறப்பிப்பது கடைசி தீர்வாகும் என்று கூறியதாகவும் கூறியுள்ளார். ஆனால் தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் பரவலை கட்டுப்படுத்த 6-8 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று அவர் அழுத்தமாக கூறியுள்ளார். இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.