இந்தியாவில், 5G இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளதை அடுத்து பயனர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிர்ச்சி தகவல்:
இந்தியாவின் தகவல் தொடர்பு வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 5G இணைய சேவை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, முதற்கட்டமாக முக்கிய நகரங்களிலும், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என பேசினார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது இந்த இணைய சேவை டெல்லி, கொல்கத்தா, சென்னை மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள், இந்த சேவை தங்கள் பயனர்களுக்கு கிடைக்கும் என்று ஜியோ நிறுவனமும், தீபாவளி முதல் 5G வசதி கொண்ட சிம் கார்டு விற்பனைக்கு வரும் என ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளது.
போனை எடுத்து இனி ” ஹலோ” சொல்லக்கூடாது – இது தான் சொல்லணும்! மாநில அரசு திடீர் உத்தரவு!!
இந்த செய்தி பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த சேவைக்கு பின் டேட்டா கட்டணங்கள் கடுமையாக உயரும் என சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே டேட்டா கட்டணம் பயனர்களை மிரட்டி வரும், மீண்டும் உயர்ந்தால் தங்கள் நிலை என்ன ஆகுமோ? என்ற கவலையில் ஆண்ட்ராய்டு வாசிகள் இருந்து வருகின்றனர்.