தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறப்பித்து உள்ளார்.
அதிகாரிகள் இடமாற்றம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் நடந்து கொண்ட முறை, அத்துமீறல் போன்றவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கரூர் மாவட்ட எஸ்.பி.,ஆக பகலவனும், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக மணிவண்ணனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்திலும் 9 – 12 வகுப்பு வரை 30% பாடங்கள் குறைப்பு – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தஞ்சை எஸ்.பி. மகேஷ்வரன் கடல் அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். திருச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக அரவிந்த் அவர்களும், சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.