தமிழ்நாட்டில் மொத்தம் 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் 500 மதுக்கடைகள் மூடப்பட இருப்பதாக சமீபத்தில் நடந்த சட்ட பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். அவர் அறிவித்ததன் படி பள்ளி மற்றும் கல்லூரி அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் வருமானம் குறைவாக இருக்கும் கடைகள் உள்ளிட்டவைகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது அந்த பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் நிலையில், இதுவரை 90 கடைகளுக்கு மேல் அடைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்து அறிவிப்பு கருணாநிதி நூற்றாண்டு விழாவை(ஜூன் 3) முன்னிட்டு தமிழக அரசு வெளியிட இருக்கிறது.