சமீபத்தில் நடந்த சட்ட பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்த கொஞ்சம் காலத்திலே மக்களுக்கு இடையூறாக இருந்த 96 டாஸ்மாக் கடைகள் எந்த அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் திமுக ஆட்சியில் மதுவிலக்கு கட்டாயம் வரும் என்று மக்கள் நம்பிய நிலையில் தற்போது 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பை கேட்டதும் இல்லத்தரசிகள் சந்தோஷம் அடைந்தனர். அதன்படி இதுவரை 90 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளியானது.
தமிழக பேருந்தில் இது வைத்திருந்தால் இனி இலவசமாக பயணிக்கலாம்…, போக்குவரத்து துறை அறிவிப்பு!!
மேலும் நடப்பாண்டில் மூடப்பட வேண்டிய 500 மதுபானக்கடைகளின் கணக்கெடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இதற்கான அறிவிப்பை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.