12 ஆம் வகுப்புக்கான பிரதான பாட தேர்வை 45,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கடந்த 13ம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொழி பாடத்தேர்வை கிட்டத்தட்ட 50, 000 மாணவர்கள் எழுதவில்லை. இதனால் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து என்ன காரணம் என்று விசாரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டிருந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் விளையாட்டு துறை அமைச்சர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இப்படி இருக்கையில் மொழி பாடத்தேர்வை தொடர்ந்து நடைபெற்ற பிரதான தேர்வையும் 45,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
‘தமிழக பெண்களின் ஊதியத்தில் பாகுபாடு.., நடிவடிக்கை எடுக்க முதல்வருக்கு வலியுறுத்தும் அன்புமணி!!
ஏற்கனவே தேர்வு எழுதாத மாணவர்களை ஆசிரியர்கள் விசாரித்து வரும் நிலையில் இது போன்று மீண்டும் மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருப்பது கல்வி வட்டாரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.