பிரபல தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானத்துறை ரைடு – கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிப்பு!!

0

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர்களிடம் வருமானத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 40 இடங்களுக்கு மேல் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் தயாரிப்பாளர்களின் சொந்தமான வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வரும் மதுரையை சேர்ந்த அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 40 -க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 200 கோடி பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபல பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் எஸ். தாணு, ஞானவேல்ராஜா, எஸ்.ஆர். பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களின் அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நடைபெற்ற சோதனையில் கிட்டத்தட்ட 200 கோடி பணமும் மற்றும் ரூ. 3 கோடி மதிப்பிலான நகையும் கணக்கில் காட்டப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் நடத்தும் சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணங்கள் வரும் என் எதிர் பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here