இதுவரை பெரிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் மக்கள் மேலும் அச்சமடைந்த வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் எதிரொலியாக பல்வேறு கட்ட காட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றினை விரட்டுவதற்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி என்று கூறி அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடுமையான நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் தற்போது கிராமப்புறங்களில் கொரோனாவின் தாக்கம் வேகமாக காணப்பட்டு வருகிறது. அதன்படி அங்கு சுமார் 40%க்கும் அதிகமாக பாதிப்பு காணப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னைக்கு விரைந்த முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் – ரயில்வே அமைச்சர் தகவல்!!
அங்கு மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. அதில் 18 மாவட்டங்களில் 7%க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதனை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் கிராமப்புறங்களில் தற்போது முறையான மருத்துவமும் கிடைக்காத காரணத்தினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.