சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளையே உலுக்கி உள்ள கொரோனா வைரஸால் தினமும் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவில் உள்ள வவ்வால்களிடம் இருந்து பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் உள்ள வவ்வால்களிடம் நடைபெற்ற சோதனையில் 2 மாதிரிகளில் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எந்தெந்த மாநிலங்கள்…?
ICMR எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் விஞ்ஞானிகள் நாடு முழுவதும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள வவ்வால்களிடம் எடுக்கப்பட்ட 4 மாதிரிகளில் சோதனை நடத்தினர். அதில் 2 மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு உள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து எடுத்த மாதிரியில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |