இந்தியாவில் கொரோனா தொற்றின் வீரியம் புதிய உச்சம் – ஒரே நாளில் 3,26,098 பேர் பாதிப்பு!!

0
இந்தியாவில் கொரோனா தொற்றின் வீரியம் புதிய உச்சம் - ஒரே நாளில் 3,26,098 பேர் பாதிப்பு!!
இந்தியாவில் கொரோனா தொற்றின் வீரியம் புதிய உச்சம் - ஒரே நாளில் 3,26,098 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை மீண்டும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது வீசும் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஏற்படும் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிக அதிக அளவிலான உயிரிழப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,26,098 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிப்பு:
கொரோனா பாதிப்பு:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் தொற்றுக்கு உள்ளாகி 3,890 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,66,207 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 3,53,299 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,04,32,898 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 36,73,802 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி 18,04,57,579 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here