அண்மை காலமாக இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு நடத்தியுள்ளது. பொதுவாக ஒரு மனிதர் உயர் ரத்த அழுத்தத்தை அடையும் போது இதய நோய் சம்பந்தமான பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.7 மில்லியன் மக்களின் ரத்த மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி கேரளாவில் உள்ள 37 % மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதற்கு வெளிநாட்டு உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தம் என்பது உடல் மெலிந்தவர்கள், பருமனானவர்கள் என அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.