ரூ.3,000 உதவித்தொகை திட்டம்…தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

0

தமிழக நாட்டில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு ரூ.3 ஆயிரத்தை  மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்து உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா இரண்டாம் அலையில் பல தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிறைய நலத்திட்டங்களை அவ்வபோது  அறிவித்து வருகின்றது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு உதவி தொகையாக 2 ஆயிரம் ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த உதவித்தொகையை மேலும் ஆயிரம் ரூபாய்  உயர்த்தி  3 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் அடிப்படையில் இன்று 12 கலைஞர்களுக்கு அந்த உதவி தொகையை வழங்கினார்.

அதனையடுத்து அந்த நாடகக் கலைஞர்கள் கூறியதாவது, பொருளாதார ரீதியாக  மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கலைஞர்கள் குடும்பத்திற்கு இந்த நிதியுதவி பெரும் உதவிகரமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 1000 கலைஞர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here