சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட, தனுஷின் நான் ருத்ரன் ஆகிய படங்களில் பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி வெளிநாடுகளில் தமிழ் திரைப்படங்களை முறையாக வெளியிடும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் 30 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளது.
30 கோடி ரூபாய் மோசடி:
வெளிநாடுகளில் தமிழ் படங்களை சரியான உரிமம் பெற்று வெளியிடும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தற்போது போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அதாவது தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி பேட்ட, நான் ருத்ரன், காஞ்சனா-3 ஆகிய திரைப்படங்களின் உரிமம் தன்னிடம் இருப்பதாக கூறி 30 கோடி ரூபாய்யை மோசடி செய்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலைமை கைமீறி போவதை உணர்ந்த முரளி அப்பொழுது ரஜினியின் பேட்ட திரைப்படத்திற்காக 15 கோடி ரூபாயை திருப்பி அளித்துவிட்டு மீத தொகையை தரமுடியாது என கைவிரித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தன்னை தாண்டி உங்களால் எதுவும் செய்ய இயலாது எனவும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் சவால் விட்டுள்ளார். தற்போது இந்த மோசடி வெட்டவெளிச்சமாகி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்