T20 உலக கோப்பையில் அஷ்வினுக்கு இடம் கொடுத்தது ஏன்? ரசிகர்கள் கேள்விக்கு ரோஹித் பதில்!!

0
T20 உலக கோப்பையில் அஷ்வினுக்கு இடம் கொடுத்தது ஏன்? ரசிகர்கள் கேள்விக்கு ரோஹித் பதில்!!
T20 உலக கோப்பையில் அஷ்வினுக்கு இடம் கொடுத்தது ஏன்? ரசிகர்கள் கேள்விக்கு ரோஹித் பதில்!!

தமிழக வீரர் அஸ்வினுக்கு T20 உலக கோப்பையில் வாய்ப்பு வழங்கியதற்கான காரணங்களை ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் வெளியிட்டுள்ளனர்.

வாய்ப்பை பயன்படுத்துவாரா அஸ்வின்!!

டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரரான அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளனர். இதில் அஸ்வினுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளனர். இவர்கள் அஸ்வின் திறமையான வீரர் என்றும், ஒரு சில போட்டிகளில் வீரர்களுக்கு சறுக்கல் ஏற்படுத்துவது பழக்கப்பட்ட ஒன்று தான் என கூறியுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் அஸ்வின் இந்த ஆண்டு மட்டும் இந்திய அணிக்காக 10 T20 போட்டியில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் ஒரு ஓவருக்கு 6, 10 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக T20 பார்மெட்டில் நல்ல ரெகார்ட் வைத்துள்ளார். இதனால் தான் அஸ்வினுக்கு T20 உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு கொடுத்தோம் என ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளனர்.

அஸ்வின் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக எதிரணிக்கு பல நெருக்கடி கொடுத்துள்ளார். பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்துள்ளனர். இதனால் T20 உலக கோப்பை தொடரில் அஸ்வின் மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்பதை தெரிந்து கொண்டு தான் ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் இவர் பேட்டிங் வரிசையில் 7 வது மற்றும் 8 வது வீரராக களமிறங்கினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். எனவே T20 உலகக்கோப்பையில் அஸ்வின் ரோஹித்தின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here