இந்திய – மியான்மர் எல்லையில் பதற்றம் – 3 அசாம் ரைபிள்ஸ் ஜவான்கள் வீரமரணம்!!

0
assam rifles
assam rifles

இந்திய-மியான்மர் எல்லையில் மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் நேற்று இரவு மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) போராளிகளால் சந்தேகத்திற்கிடமான தாக்குதலில் குறைந்தது மூன்று அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அசாம் ரைபிள்ஸ் வீரர்கள்:

இந்தியா-மியான்மர் எல்லையில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள கொங்டாலில் அசாம் ரைபிள்ஸின் படைகள் சர்வதேச எல்லையில் மூன்று நாட்கள் செயல்பட்ட பின்னர் தங்கள் இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் மாலை 6:30 முதல் 7:00 மணி வரை நடந்தது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இதில் மூன்று அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!!

உயிரிழந்தவர்கள் ஹவில்தார் பிராணய் கலிதா, ரைபிள்மேன் ஒய்.எம். கோனியாக் மற்றும் ரைபிள்மேன் ரத்தன் சலீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். “சிறிய காயங்களுக்கு” ஆளான ஐந்து ஜவான்கள் இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த போராளி அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அசாம் ரைபிள்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here