அபோட் ரேபிட் டைக்னாஸ்டிக்ஸ் பிரிவின் வீட்டு அடிப்படையிலான ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒப்புதல் அளித்துள்ளது
அபோட் கருவி :
கொரோனா பரவலை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கருவிகள் சரியான முடிவுகளை தராத காரணத்தால் அனைத்தையும் திருப்பி அனுப்பியது இந்திய அரசு. இந்நிலையில் கொரோனா தாக்கிய ஒருவரின் உடலில் அதன் எதிர்ப்பு சக்தியான ஆன்டிபாடி உருவாவதை கண்டறியும் கருவியை இந்திய வைரலாஜி நிறுவனமும் (என்ஐவி) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (ஐசிஎம்ஆர்) இணைந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சிகாகோவை தளமாகக் கொண்ட அபோட் ரேபிட் கண்டறிதல் பிரிவு உருவாக்கிய இரண்டாவது வீட்டு அடிப்படையிலான ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. Covid-19 ஆன்டிஜென் டெஸ்ட் கருவி , சுய பயன்பாட்டு கிட் ஜூலை 5 வரை தற்காலிக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, கிட்டின் விலை நிறுவனம் அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.