முழு ஊரடங்கு எதிரொலி – தமிழகத்தில் 24 மணி நேரம் போக்குவரத்து இயங்க அனுமதி!!

0

தமிழகத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பொது போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு நடவடிக்கை வருகிற மே மாதம் 10ம் தேதி காலை 4 மணி முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த ஊரடங்கு சுமார் 2 வாரத்திற்கு அதாவது வருகிற 24ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கின் பொழுது பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவசர பணிகளுக்கு மட்டுமே உரிய காரணங்களுடன் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் முறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூரில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவர்.

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஊரடங்கு ரத்து – முதல்வர் அறிவிப்பு!!

தற்போது இதன் காரணமாக வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களில் 24 மணி நேரமும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கின் போது சலூன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மற்றும் நாளை சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here