இந்தியவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் வருகிற ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களில் உற்பத்தி அபாரமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் தற்போது அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்புட்னிக், நோவாவாக்ஸ் போன்ற மருந்துகளுக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக முறையான நேரத்தில் மக்களுக்கு தடுப்பூசி போய் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா நோயாளிகளுக்கான தடுப்பூசிகள் வருகிற ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களில் 216 கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஸ்டெர்லைட்டில் ஆக்சிசன் உற்பத்தி நிறுத்தம் – அதிர்ச்சியில் தமிழகம்!!
மேலும் வரும் நாட்களில் தடுப்பூசி முறையாக கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தடுப்பூசிகள் உற்பத்தி குறித்த அட்டவணையையும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த தகவல் நாட்டு மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.