ஆந்திரப் பிரதேசத்தின் அல்லவரம் பகுதியை சேர்ந்த 21 வயது சிறுமியை 3 நபர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் – வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!
21 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்:
ஆந்திராவில் 21 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மூவரும் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களைக் கிளிக் செய்து பின்னர் அவற்றைப் பிளாக்மெயில் செய்ய பயன்படுத்தினர் என்று கூறப்படுகின்றது.இரண்டு வாரங்களுக்கு முன்பு, அந்த பெண் ஒரு ஆண் நண்பருடன் கோமராகிரிபட்னம் கடதரி அருகே உள்ள கடற்கரைக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் அந்த இடத்தில் சிறுமியையும் அவரது நண்பரையும் சந்தித்து பேசியுள்ளனர். சிறுமியும் அவரது நண்பரும் அவர்கள் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து இளைஞர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, சிறுமியின் நண்பரைக் கட்டி வைத்துள்ளனர். அதன் பிறகு இளைஞர்கள் மூவரும் சேர்ந்து 21 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.சமூகம் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு பயந்து,
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த பெண் இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், சமீபத்தில், அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணைப் பெற்று, அவரை அச்சுறுத்த தொடங்கினார். “அவர் தனது விருப்பத்தை நிறைவேற்ற மறுத்தால் அவரது நிர்வாண படங்களை சமூக ஊடக தளங்களில் பதிவேற்றுவதாக அவர் மிரட்டினார். துன்புறுத்தலைத் தாங்க முடியாமல், அந்த பெண் தனது குடும்ப உறுப்பினர்களிடம் எல்லாவற்றையும் தெரிவித்தார், அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ”பெண்ணின் குடுப்பதினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைத்துள்ளனர் .