அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தனது இடத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
50 ஓவர் உலக கோப்பை:
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடரானது அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், பங்கு பெறுவதற்காக, சர்வதேச அளவிலான 13 அணிகள் தற்போதிலிருந்தே போட்டியிட்டு வருகின்றனர். இந்த அணிகளுக்கான பட்டியலில், முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகளே 50 ஓவர் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், 134 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று ஏற்கனவே இந்திய அணி தகுதி பெற்றுவிட்டது. மேலும், இங்கிலாந்து (125), நியூசிலாந்து (125), ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 120 புள்ளிகளுடன் முதல் 6 இடத்தை பெற்று உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுவிட்டன.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி டி உஷா தேர்வு…, பல பதக்கங்களை குவித்தவருக்கு கிடைத்த அங்கீகாரம்!!
இந்த அணிகளை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி 115 புள்ளிகளுடன் 7 வது இடத்துக்கு முன்னேறி தகுதி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தற்போது, இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டி மழை காரணமாக முடிவில்லாமல் போனது. இது ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.