நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக ரூ.500, ரூ.2000 ஆம் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால் காலப்போக்கில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைய தொடங்கியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ATM ல் கூட 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. இதனால் ரிசர்வ் வங்கி நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதாவது இனி வரும் நாட்களில் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் வழங்க கூடாது என்றும், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
சூப்பர் ஸ்டாரின் அம்மா திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!
மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு மேல் செல்லாது எனவும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இனி வரும் நாட்களில் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று அறிவித்துள்ளனர்.