மருத்துவ செலவுக்கு பயந்து மாற்றுத்திறனாளி குழந்தை கொலை – கர்நாடகாவில் கொடூரம்!!

0

கர்நாடகா மாநிலத்தில் 2 வயது மாற்று திறனாளி குழந்தையை மருத்துவ செலவிற்கு பயந்து ஓர் குடும்பம் கொலை செய்துள்ளது. தற்போது இந்த செயல் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

கர்நாடகா:

இன்றைய காலங்களில் குழந்தைகளின் கொலை சற்று அதிகரித்து வருகிறது. உலகில் இளமையானவர்களை கொண்ட நாடு என்றால் அது இந்தியா தான். ஆனால் இங்கு குழந்தைகளின் கொலை எண்ணிக்கை அதிகரிப்பது சற்று வருத்தத்திற்குரியதே. தற்போது கர்நாடகா மாநிலத்தில் இதுபோல் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கனகபுரா பகுதியில் சங்கர் மானசா ஆகிய தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஓர் மாற்றுத்திறனாளி குழந்தை உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த குழந்தைக்கு அந்த குடும்பம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் அந்த குழந்தையின் மருத்துவ செலவு சற்று அதிகமானதால் அந்த குடும்பம் திணறியது. தற்போது இதற்காக அவர்கள் கையில் எடுத்த முடிவு மிக கொடுமையானது. அந்த குடும்பத்தில் உள்ள பாட்டி மற்றும் கொள்ளுப்பாட்டி அந்த 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளனர். கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

ஆவணங்கள் இன்றி நெடுஞ்சாலையில் எடுத்து சென்ற தங்க நகைகள் – போலீசார் அதிரடி நடவடிக்கை!!

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் குழந்தையை கொன்றோம் என்று குடும்பத்தார் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் போலீசார் அந்த குழந்தையின் தாய், தந்தை, பாட்டி மற்றும் கொள்ளுப்பாட்டி ஆகிய 4 போரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here