பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் பகுதிக்கு நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர் சென்று மீன்பிடிக்க உதவிய 2 வனத்துறை அதிகாரிகளை போலீசார் சஸ்பெண்ட் செய்தனர்.
பாதுகாக்கப்பட்ட பகுதி:
கொடைக்கானலில் உள்ளது பேரிஜம் என்ற அடர்ந்த வனப்பகுதி. அந்த வனப்பகுதிக்கு செல்ல காவல் துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் . இந்த நிலையில், கடந்த மாதம், 17 ஆம் தேதி நடிகர்கள் விமல், சூரி மற்றும் இவர்களுடன் 2 இயக்குனர்கள் கொடைக்கானல் பேரிஜன் பகுதியில் சென்று மீன் பிடித்து உள்ளனர்.
புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது!!
அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு உள்ளனர். இதை பார்த்த பலர் இவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். பொது மக்கள் இவர்கள் பெயரில் புகார் ஒன்று அளித்தனர். வனத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரி கூறியது:
இந்த விவகாரம் குறித்து மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி கூறியதாவது, “இது அடர்ந்த பகுதி. இவர்கள் எப்படி உள்ளே சென்றனர் என்று தெரியவில்லை. இவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்ரகளுக்கு உள்ளே செல்ல உதவிய வன அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யபட்டு உள்ளனர்”.
மேலும், மோயர்பாயிண்ட் என்ற இடத்தில ஒரு இரும்பு கேட் போடப்பட்டு உள்ளது, அதை தாண்டி தான் வாகனங்கள் உள்ளே செல்ல முடியும். இவர்கள் எப்படி சென்றனர் என்று விசாரித்து வருகிறோம். இவர்கள் முறையாக இ-பாஸ் பெற்று தான் இங்கு வந்தார்களா என்பதையும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.