பெற்றோர்,பாட்டி மற்றும் தங்கையை கொன்று புதைத்த 19 வயது இளைஞன்.. மேற்கு வங்கத்தில் கொடூரம்!!!

0

மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் தனது பெற்றோர்,பாட்டி மற்றும் தங்கையை கொன்று தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு குடோனில் புதைத்து உள்ளார். அவரின் மூத்த சகோதரர் அளித்த புகாரின் பெயரில் தற்போது அந்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அன்று, ஆசிப் முகமது என்ற 19 வயதே ஆன இளைஞர் ஒருவர், தனது பெற்றோர், பாட்டி மற்றும் தங்கையை ஆகியோரை நீரில் மூழ்கடித்து கொலை செய்து உள்ளார். அதன் பின்னர் அந்த உடல்களை வீட்டிற்கு அருகில் உள்ள குடோனில் ஒன்றில் குழி தோண்டி புதைத்தும் உள்ளார். மேலும் இது குறித்து அவரின் மூத்த சகோதரரான ஆரிஃப் கூறுகையில், இது குறித்து வெளியே தெரிவித்தால் தானும் கொலை செய்யப்பட்டு விடுவோமோ  என்ற அச்சத்திலேயே இவ்ளோ நாள் அமைதி காத்ததாகவும், தற்போது அங்கு இருந்து தப்பி வந்து அவர் மீது புகார் அளித்தாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து காவல் துறை இருவரிடமும் விசாரித்து வருகிறது. இந்த தகவல்களை அறிந்த அண்டை வீட்டார், கடந்த மூன்று நான்கு மாதங்களாக அந்த வீட்டில் உள்ள யாரையும் தாங்கள் பார்க்கவில்லை என்றும், அவர்களை பற்றி கேட்டால்,”புதிதாக கொல்கத்தாவில் வாங்கியுள்ள பிளாட்டிற்கு சென்று அங்கேயே தங்கி விட்டதாகவும்”, ஆசிப் கூறிவந்து உள்ளார்.

மேலும் அவர்கள் கூறியதாவது,10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காக அந்த சிறுவன் மடிக்கணினி கேட்டதாகவும், அதற்கு வீட்டில் மறுப்பு தெரிவிக்க வீட்டை விட்டு ஒட்டி விட்டதாகவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் அந்த சிறுவன் வந்த பிறகு, அவரது பெற்றோர் அவருக்கு ஒரு விலையுயர்ந்த கணினி மற்றும் பிற கேஜெட்களை வாங்கி கொடுத்ததாக  கூறப்படுகிறது. இது பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here