வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் இப்போது மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது.