இந்தியாவில் கால் பதித்தது கொலைகார கொரோனா – டெல்லியில் 17 பேருக்கு பாதிப்பு..!

0

சீனா மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட 24 நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளது.

1523 பேர் பலி..!

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் 1523 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 66,000 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

டில்லி விமானநிலையத்தில் இதுவரை 5,700க்கும் மேற்பட்ட பயணிகளிடம் நடந்த கொரோனா வைரஸ் சோதனையில் 4,707 பேருக்கு தாக்குதல் இல்லை என உறுதியாகி விட்டது.

கொரோனா நோயாளியை சுட்டுக் கொன்ற வடகொரியா..! சந்தேகம் எழுந்ததால் நடவடிக்கை..!

17 பேருக்கு அறிகுறி..!

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இதுவரை 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இன்னும் 817 பயணிகளிடம் சோதனை நிறைவு பெறாமல் உள்ளது.

சீனாவின் உயிரி ஆயுதமா (Bio-Weapon) கொரோனா வைரஸ்..? தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா..!

மேலும் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here