தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு மின்தடை அறிவுப்பு.., முழுவிபரம் உள்ளே!!

0

தமிழகத்தில், மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, நாளை மறுநாள்(17ம் தேதி) மலையான்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்த துணைமின் நிலையங்களில் இருந்து, மின் வினியோகம் பெறும் உமையத்தலைவன்பட்டி, சுப்புலாபுரம், செவல்குளம், ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, மலையான்குளம், மேலநீலிதநல்லூர்,திருவேங்கடம், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி,சத்திரப்பட்டி, சிதம்பராபுரம், பாறைப்பட்டி, பருவக்குடி, ரெங்க சமுத்திரம், கரிசல்குளம், மகாதேவர்பட்டி, புதுப்பட்டி, கரிசல்குளம், ஆவுடையார்புரம், குண்டப்பட்டி, சென்னிகுளம், சங்குப்பட்டி, குறிஞ்சாகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

இதனை தொடர்ந்து நக்கலமுத்தன்பட்டி, , கொம்பன்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, புளியங்குளம், வெங்கடாசலபுரம், மைப்பாறை, இளையரசனேந்தல் போன்ற பகுதிகளில் மதியம் 1 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here