சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை 17 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து முன்னரே கணிக்க தவறியதற்கு மன்னிப்பும் கோரி உள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
சீனாவின் ஹவான் நகரில் மட்டும் இது வரை 4000 கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று சீனாவில் 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைரஸ் பாதிப்பினை அறியாமல் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுவரை சீனாவை தவிர கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நாடுகள்:
- ஹாங்காங்: 8 பேர்
- தாய்லாந்து: 8 பேர்
- மக்காவோ: 5 பேர்
- ஆஸ்திரேலியா: 5 பேர்
- சிங்கப்பூர்: 5 பேர்
- அமெரிக்கா: 5 பேர்
- மலேசியா: 4 பேர்
- ஜப்பான்: 4 பேர்
- தென் கொரியா: 4 பேர்
- தைவான்: 4 பேர்
- பிரான்ஸ்: 3 பேர்
- கனடா: 1 நபர்
- ஜெர்மனி: 1 நபர்
- நேபாளம்: 1 நபர்
- இலங்கை: 2 நபர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |