தென் கொரியாவில் உள்ள டேகுவில் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடரின் 15 வது சீசன் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய ஜூனியர் மற்றும் சீனியர்கள் பல பதக்கங்களை குவிந்திருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து, இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவின், இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களான சிவ நர்வால் மற்றும் விஜய்வீர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், ஆறு முறை வாய்ப்பு வழங்கப்பட்டதில், சிவ நர்வால் (9.3, 10.2, 9.2, 10, 10,9, 10.5) என 17 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
சிலிண்டர் பயனர்களுக்கு ஷாக் – மொத்த சலுகையும் ரத்து! இனி முழு தொகையும் செலுத்த வேண்டியது தான்!!
இதில், கொரிய வீரர் பார்க் டேஹுன் 13 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவரை தொடர்ந்து, இந்திய வீரரான விஜய்வீர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதே போல, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவருக்கான ஜூனியர் பிரிவில் இந்தியாவின் டாங்கி சாகர் மற்றும் ராணா சாம்ராட் முன்னிலை பெற்று வருகின்றனர்.